Monday, 19 September 2016

ஆதித்தமிழ் வரலாறு -1

நாட்டின் தோற்றமும் பழமையும்

“தமிழ் நாடு” என்று பண்டு முதல் அழைக்கப்பட்டு வந்த நாடு எமது நாடாகும். தமிழ் மொழி வழங்கி வந்த நாடே தமிழ் நாடு என்று வழங்கப்படுகிறது. எமது மொழி இன்ன காலத்திற்கு முன் தோன்றியது என்று திட்டமாகக் கூற முடியாது. மொழித் தோற்றம் அங்ஙனமிருப்பின் நாட்டின் தோற்றம் அதற்கும் எத்துணையோ ஆண்டுகட்கு முற்பட்டிருத்தல் வேண்டும் என்பது வெள்ளிடை மலை.

ஒரு நாட்டை அங்குள்ள மொழி கொண்டு அழைப்பது மரபுமுறை. அது போன்றே தமிழ் வழங்கிவந்த நாட்டை “தமிழ் நாடு” என்று அழைத்தனர். இதற்கு அனேக உதாரணங்கள் உண்டு. மொழியின் வேறுபாடுகட்கு ஏற்ப பல நாடுகள் வௌ;வேறு பெயரால் அழைக்கப்படுகின்றன. தொல்காப்பியச்சிறப்புப் பாயிரத்தில் ‘தமிழ் கூறும் நல்லுலகம்;’ என்பதனால் இவ்வுண்மை விளங்கும்;;.

உலகில் மக்கள் உற்பத்தி சம்பந்தமாக ஆராய்ச்சியாளர் பல விதமாக கூறிவந்தனர். சமீப காலத்தில் கீன் என்னும் பண்டிதர் தமது உடற் கூற்று நு}லில் ஜாவா, சுமத்திரா முதலிய தீவுகளே மக்கள் தோற்றுவாய் செய்த இடமென்று கூறுகின்றார். இப்பகுதிகள் பண்டைய தமிழ் உலகத்தின் கீழைப் பகுதிகள் என்று ஆராய்ச்சி வல்லுனர் திடமாகக் கூறுகின்றனர். இவ்விடங்களிலே தமிழர்களது சமய நிலையம் போன்றவை பல இன்றும் காணக்கிடக்கின்றன. இதனால் தமிழ்ப் பெரு நாடுதானே மக்கள் உற்பத்திக்கும் மூலஸ்தானமாகிறது. மக்கள் தோற்றத்திற்கு இருப்பிடமாக விளங்கிய தமிழ்ப் பெரு நாட்டில் வழங்கப்பட்டு வந்த மொழி ‘தமிழ்மொழி’ யென்பது செயங்கோன்தரைச் செலவு முதலிய பழந் தமிழ் நு}ல்களால் அறியக்கிடக்கின்றது.

உலகில் மனிதப் பிறவி முதன்முதலாகத் தோன்றிப் பல காலம் வரைக்கும் அவர்களிடையே மொழி கையாளப்பட்டு வரப்படவில்லை. இந் நிலவுலகில் மக்கட் கூட்டம் முதன் முதலாகத் தோன்றியது இற்றைக் கைந்நு}றாயிர மாண்டிற்கு மேல் என்பது பல அறிஞர்கள் கூற்று. இஃது எங்ஙனமிருந்த போதிலும் நாகரிக உற்பத்தி இற்றைக்கு அறுபதினாயிர மாண்டிற்கு முன்னராகவேயிருக்கு மென்றும், மொழியின் உபயோகம் கையாளப்படத் தொடங்கி சற்றேறக்குறைய முப்பதினாயிர மாண்டுகள் இருக்குமென்றும் அறிஞர்கள் துணிகின்றனர்.

உலக உற்பத்தியில் ஒன்றாக உற்பவித்த மனிதக் குழாம் தனித்து வாழத் தொடங்கியதே முதற்படியாகும். மனிதர் விலங்கினம் போன்று கானகத்தில் தனித்தனியே உணவிற்காக அலைந்து திரிந்தும், பின்னர் உணர்ச்சி ஏற்பட ஒன்று கூடி குழுவினராக வாழ்ந்தும், அப்படி வாழுங்காலையில் தம்முள் சல்லாபம் செய்ய விரும்பி சைகை மூலம் கதைத்தும், பின்னர் அதற்கு ஒசையைக் கொடுத்தும் மொழியை ஆரம்பித்து வைத்தனர். நாளடைவில் பலவித மாறுதல்களுக்கும் இலக்காகி தேறிய உருப்பெற்றுத் திகழ்ந்த அக் காலத்தில் அம்மொழியின் பெயரையே நாட்டிற்கும் இட்டு அழைத்து வந்திருப்பர். இவ்விதந்தோன்றியது தான் தமிழ்நாடு என்பதும் அறிஞர் கொள்கை.

அகில உலகின் மக்கட்பிறவித் தோற்றம் தமிழ் நாடேயென்பது இன்று மறுக்க முடியாத நிலையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் இந்துமாக்கடலில் குமரிக்கண்டம் என்று ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்தது. மக்கட் பிறவியின் தோற்றம் இங்குதான் உண்டாயது. அக்கண்டம் சிறிது சிறிதாக கடலில் ஆழ்ந்த பொழுது மக்கள் வடக்கே சென்று உலகமெங்கணும் பரவி, பல பாஷைகளைப் பேசி, அப்பாஷைகளைக் கொண்டு பல சாகியத்தார்களாக மாறினர். இன்றுள்ள தமிழ்நாடு எஞ்ஞான்றும் அழியாத நிலப்பரப்பாகும். வடக்கிலும் மேற்கிலும் பரவிய மக்கள் தமிழ் மக்களே. மேலும், இக் குமரிக் கண்டத்திலிருந்து வெளிச் சென்றோரே வேற்று மொழியாளர் போன்று இமயமலைப்பகுதியால் இந்திய நாட்டில் புகுந்துள்ளனர் என்பதற் கையமின்று. இத் தமிழ் மக்கள் நாகரிகங்களே உலக நாகரிகங்களுக்கு அடிப்பைட. பல இடங்களிலும் தமிழ் மக்கள் தனித்து குழுக்குழுவாக வாழ்ந்த காலத்தில் தமிழ் மொழியும் மாறுபாடடைந்திருக்கும். இவ்விதம் மொழி திரியவே மக்களும் பலராகப் பிரிந்தனர். இதனால் உண்மைத் தமிழர் இன்றைய உலகில் பல சாகியத்தாராக விளங்குகின்றனர்.

மிகப் பழைய மனிதர் விலங்குகள் போன்ற தனித்த முரட்டு வாழ்க்கையை நடத்தி வந்தனர். அவர்கள் அப்பொழுது உணவாக அகப்பட்டவற்றை உண்டு மிருக வாழ்க்கையையே நடத்தி வந்துள்ளார்கள். பின்னர் உணவுக்காகவும், தம்மைப் பாதுகாக்கும் பொருட்டும் ஒன்றுகூடி சிறு சிறு மனிதக் குழாங்களாக வாழத் தொடங்கினர். அப்பொழுது அவர்கள் இயல்பாகக் கிடைத்த கற்களை ஆயுதங்களாக உபயோகித்து உணவைத் தேடினார்கள். பின்னர் இயற்கையின் உற்பத்தியான பல உலோகங்களையும் படிப்படியாக உபயோகத்திற்குக் கொண்டு வந்தனர். ஆற்றங்கரையிலும், சம வெளிகளிலும் வீடுகளை அமைத்தார்கள். தமக்கு வேண்டிய பண்டங்களை மண்ணாலேயே செய்தனர். உணவிற்குத் தானிய உற்பத்தி செய்தார்கள். இதனால் மாரி காலத்தில் அவர்களுக்குச் சுயமாகச் சிந்திக்க அவகாசம் கிடைத்தது. அப்;பொழுது மொழியைப்பற்றிய சிந்தனை உண்டாயது. சுயமாக வழக்கில் இருந்துவந்த சைகைமுறைச் சம்பாஷணையை சித்திர எழுத்துக்களாகக் களிமண் தகடுகளில் தீட்டினார்கள். படிப்படியாக அச்சொல் மூலங்களுக்கு ஓசையைக் கொடுத்தனர். தமக்கு வேண்டிய கோயில்களை அமைத்தனர். தம்மிடத்து எஞ்சிய பொருள்களை அவற்றை வேண்டியோருக்குக் கொடுத்து அவர்களிடமிருந்து தமக்கு வேண்டியவற்றைப் பெற்றனர். இவ்விதம் பண்டமாற்று ஆரம்பமாயது. இப் பழக்கமே வாணிபமாக வளர்ந்தது. மக்கள் கலந்துறவாடும் பொழுது நாகரிகம் பரவத் தொடங்கியது. பழக்கவழக்கங்கள், கலைகள், மத உணர்ச்சிகள் முதலியன இக்கலந்துறவாடலால் மாறுபடுதல் இயல்பு. மக்கள் இடைக்காலங்களில் நல்லிடங்களைத் தேடிப்போயினர். அக்காலத்தில் அவர்கள் வாழ்ந்த நகரங்கள் இயற்கை மாறுபாட்டால் மண்ணுள் மறைந்தன. இன்றைய மக்கள் உள்ளத்தில் பண்டைய நாகரிகத்தையும், முன்னோர் வாழ்க்கையையும் அறிய வேண்டும் என்னும் அவாவால் எழுந்ததே ஆராய்ச்சி. புதைபொருள் ஆராய்ச்சியால் இயற்கை மாறுபாட்டால் கூறடைந்த நகரங்கள் பல கண்டுபிடிக்ககப்பட்டுள்ளன. இவற்றைப் பிற்கூறுவாம்.

உலக நாகரிகத்திற்கு பண்டைத் தமிழர் செய்துள்ள தொண்டுகள் மறக்க முடியாதவை. நாகரிக முன்னணியில் இன்று விளங்கும் ஐரோப்பா உரோமபேரரசிலிருந்து பிறந்ததாகும். உரோம சக்கிராதிலபத்தியம் கிரேக்கர்களிடமிருந்து அறிந்த நாகரிகத்தால் உண்டாயது. கிரேக்கர் பாரஸிக மக்களை வெற்றி கொண்டதாலேயே உன்னத நிலை அடைந்தனர். பாரஸிக மக்கள் யாரிடமிருந்து அறிந்தனர்?

பாரஸீக நாடுகளில் பண்டைத் தமிழ் மக்கள் குடியேறி தமது நாகரிகத்தைப் பரப்பியதற்கு உயர் சான்றுகள் பலவுள. இவற்றினை ஆராய்ச்சியாளர் இன்றைய உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளனர். ஆகவே தமிழ் மக்களே அவர்கள் என்பதில் ஐயப்பாடு தோன்ற இடமில்லை. எமது வரலாற்றுத் தொடர்பை அறிய முற்படவே ஆராய்ச்சி தொடங்குகிறது.

No comments:

Post a Comment